லாக் டவுனில் மேலும் சில கடைகளைத் திறக்க அனுமதி: சலூன் கடைகள் செயல்படலாமா? எவை திறக்கப்பட கூடாது? உள்துறை அமைச்சகம் நள்ளிரவில் புதிய உத்தரவு

By பிடிஐ

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள 2-ம் கட்ட லாக்டவுன் காலத்தில் கூடுதலாக என்னென்ன கடைகளைத் திறக்கலாம், அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளைத் தவிர்த்து எந்தக் கடைகளைத் திறக்கலாம் என்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று நள்ளிரவில் உத்தரவு வெளியிட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் கடந்த மாதம் 25-ம் தேதி முதல் கட்டமாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி அறிவித்தார். முதல்கட்ட லாக் டவுன் காலத்தில் வேளாண் செயல்பாடு, தொழிற்சாலை, வர்த்தக நிறுவனங்கள், சிறுதொழில்கள் மூடப்பட்டதால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருமானத்தை இழந்தனர்.

அதன்பின் 2-வது கட்டமாக லாக் டவுன் கடந்த 15-ம் தேதி முதல் வரும் மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே 20-ம் தேதிக்குப் பின் கரோனா பாதிப்பு குறைந்த இடங்களில் விதிமுறைகள் தளர்த்தப்பட்டு, பொருளாதாரச் செயல்பாட்டுக்கு அனுமதிக்கப்படும் என்று மோடி தெரிவித்தார்.

அதன்படி மத்திய உள்துறை அமைச்சகம் வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டு வருகிறது. சரக்கு லாரிப் போக்குவரத்து, வேளாண் பணிகள், மீன்பிடித் தொழில், சுயதொழில்கள் ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த இரு நாட்களுக்கு முன் வெளியிடப்பட்ட அறிவிப்பில் மாணவர்களுக்கான பாடப் புத்தகக் கடைகள், மாவு அரைக்கும் மில்கள், மின்விசிறி விற்பனை செய்யும் எலக்ட்ரிக்கல் ஸ்டோர், மொபைல் ரீசார்ஜ் கடைகள், பால் பதப்படுத்தும் தொழிற்சாலை ஆகியவற்றைத் திறக்கலாம் எனத் தெரிவித்தது.

இந்நிலையில் 3-வது கட்டமாக பல்வேறு கடைகளை இன்று முதல் செயல்பட அனுமதியளித்து நேற்று நள்ளிரவு உத்தரவை உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

எவை திறக்க அனுமதியில்லை?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

6 hours ago

ஆன்மிகம்

5 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்