கோட்டாவில் சிக்கிய மகாராஷ்டிர மாணவர்களை மீட்க நடவடிக்கை: அசோக் கெலாட்டுடன் உத்தவ் தாக்கரே ஆலோசனை

By செய்திப்பிரிவு

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் சிக்கித் தவிக்கும் மகாராஷ்டிர மாநில மாணவர்களை மீட்பது தொடர்பாக இருமாநில முதல்வர்களும் இன்று ஆலோசனை நடத்தினர்.

லாக்டவுன் நீட்டிக்கப்பட்ட நிலையில் ராஜஸ்தானிலிருந்து 7000த்திற்கும் அதிகமான மாணவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் சிக்கிக்கொண்டனர். அவர்கள் அனைவரும் ராஜஸ்தானிலிருந்து அவர்களின் சொந்த மாநிலமான உத்தரப் பிரதேசத்திற்கு பேருந்துகளில் அழைத்து வரப்பட்டனர்.


கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.

இதனால் ராஜஸ்தான் மாநிலத்தில் கோட்டா நகரத்தில் தங்கி பயிற்சி மையங்களில் படித்துவரும் சுமார் 7000 மாணவர்கள் சிக்கிக் கொண்டனர். இவர்கள் அனைவரும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களில் உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநில அரசுகள் பேருந்துகளை அனுப்பி பத்திரமாக மீட்டு வந்தது.

கோட்டாவில் சிக்கிய மாணவர்களில் மகராஷ்டிர மாணவர்களும் உள்ளனர். அவர்கள் அனைவரும் பயிற்சி மையங்கள் உள்ள பகுதியில் தங்கியுள்ளனர். அவர்கள் போதிய உணவு உள்ளிட்ட வசதிகள் இல்லாமல் தவிப்பதாக தகவல் வந்துதுள்ளது. இதையடுத்து மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது மாணவர்களை மீட்பது குறித்து ஆலோசித்ததாக தெரிகிறது. மேலும் இரு மாநிலங்களும் இணைந்து கரோனாவை தடுப்பது பற்றியும் பேசியதாக தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 mins ago

இந்தியா

14 mins ago

கல்வி

35 mins ago

தமிழகம்

39 mins ago

சினிமா

56 mins ago

தொழில்நுட்பம்

1 hour ago

இந்தியா

43 mins ago

இந்தியா

50 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

மேலும்