இந்தியாவில் கரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை நெருங்குகிறது; 24 மணிநேரத்தில் 50 பேர் பலி: 2-வது இடத்தில் குஜராத்

By ஐஏஎன்எஸ்

கரோனா பாதிப்பைத் தடுக்க கடந்த 25 நாட்களாக லாக்டவுன் அமலில் இருந்தும் நாளுக்கு நாள் கரோனாவின தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 50 பேர் பலியாகியுள்ளனர், 640 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 984 ஆக அதிகரித்துள்ளது, உயிரிழந்தோர் எண்ணிக்கை 640 ஆக அதிகரித்துள்ளது. 3,869 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். 15 ஆயிரத்து, 474 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மத்திய சுகதாரத்துறையின் தகவலின்படி, நேற்று மாலை வரை 37 பேர்இறந்துள்ளனர். இதில் மகாராஷ்டிராவில் 19 பேர், குஜராத்தில் 13 பேர், மேற்கு வங்கத்தில் 3 பேர், தமிழகம், ஜார்கண்டில் தலா ஒருவர்.

இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 232லிருந்து ஒரே நாளில் 251 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த இடத்தில் மத்தியப் பிரதேசத்தில் பலி எண்ணிக்கை 76 ஆகவும், குஜராத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 90 ஆகவும் அதிகரித்துள்ளது.

டெல்லியில் நேற்று உயிரிழப்பு இல்லாததால் பலியானோர் எண்ணிக்கை 47 ஆக தொடர்கிறது. ராஜஸ்தானில் 25 பேரும், தெலங்கானாவில் பலியானவர்கள் எண்ணிக்கை 23 ஆகவும் உள்ளது இரு மாநிலங்களிலும் நேற்று உயிரிழப்பு இல்லை. உத்தரப் பிரதேசத்தில் உயிரிழப்பு 20 பேர், தமிழகத்தில் 18 பேர், கர்நாடகாவில் 17 பேர், பஞ்சாப்பில் 16 பேர், மேற்கு வங்கத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 5 பேரும், ஹரியாணா, ஜார்கண்ட், கேரளாவில் தலா 3 பேரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். பிஹாரில் 2 பேரும், ஒடிசா, இமாச்சலப் பிரதேசம், அசாம், மேகாலயா ஆகிய மாநிலங்களில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகபட்சமாக 5,218 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் மகாராஷ்டிர மாநிலத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 722 ஆக உயர்ந்துள்ளது.

அதைத் தொடர்ந்து டெல்லியில் 2,156 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 611 பேர் குணமடைந்துள்ளனர். குஜராத்தில் 2,178 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ரராஜஸ்தானில் 1,659 பேரும், தமிழகத்தில் 1,596 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர், 635 பேர் குணமடைந்துள்ளனர். மத்தியப்பிரதேசத்தில் 1,552 பேரும், தெலங்கானாவில் 928பேரும், கேரளாவில் 427 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தில் 1,294 பேர், ஆந்திரவில் 757 பேரும், கர்நாடகாவில் 418 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் 380 பேர், மேற்கு வங்கத்தில் 423 பேர், பஞ்சாப்பில் 245 பேர், ஹரியாணாவில் 254 பேர், பிஹாரில் 126 பேர், அசாமில் 35 பேர், உத்தரகாண்ட்டில் 46 பேர், ஒடிசாவில் 79 பேர், சண்டிகரில் 27 பேர், சத்தீஸ்கரில் 36 பேர், லடாக்கில் 18 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்தமான் நிகோபர் தீவில் 16 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 39 பேர், புதுச்சேரியில் 7 பேர் பாதிக்கப்பட்டு 3 பேர் குணமடைந்தனர். கோவாவில் பாதிக்கப்பட்டோர் யாருமில்லை. மோகாலயாவில் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேகாலயாவில் 11 பேர், ஜார்க்கண்டில் 45 பேர், மணிப்பூரில் 2 பேர், மிசோரம், அருணாச்சலப் பிரதேசத்தில் தலா ஒருவர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்''.

இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்