23 ஆயிரம்  வாகன ஓட்டுனர்களுக்கு ரூ.5000: டெல்லி அரசு வழங்கியது

By செய்திப்பிரிவு

டெல்லி மாநில அரசு வாகன ஓட்டுனர்கள் 23 ஆயிரம் பேரின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு 5 ஆயிரம் ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தியுள்ளது.

வேலையிழந்துள்ள தொழிலாளர்களுக்கு டெல்லி அரசு நிதியுதவி வழங்கி வருகிறது. டெல்லி அரசு ஏற்கெனவே கட்டிட தொழிலாளர்களின் குடும்பத்திற்கு தலா 5000 வழங்கியுள்ளது.
ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள ஆட்டோ, டாக்சி, இ-ரிக்க்ஷா உள்ளிட்ட வாகன ஓட்டுனர்களுக்கு தலா 5,000 நிதியுதவி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் கேஜ்ரிவால் அறிவித்தார்.
டெல்லியில் யாரும் பசியால் உணவின்றி தவிப்பதற்கு எனது அரசு விடாது, எனவே, அடுத்த 7 முதல் 10 நாட்களுக்குள் இவர்களுக்கு இந்த நிதியுதவி வழங்கப்படும் எனத் தெரிவித்தார். அதன்படி ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்டோருக்கு டெல்லி அரசு நிதியுதவி வழங்கி வருகிறது.

இதுகுறித்து டெல்லி மாநில போக்குவரத்துறை அமைச்சர் கைலாஷ் கெலோட் கூறியதாவது:
ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள ஆட்டோ, டாக்சி, இ-ரிக்க்ஷா உள்ளிட்ட வாகன ஓட்டுனர்கள் 1.6 லட்சம் பேரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இவர்களில் 23 ஆயிரம் பேரின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு 5 ஆயிரம் ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 20 ஆயிரம் பேரின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அவர்கள் வங்கி கணக்கில் செலுப்படும்’’ எனக் கூறினார்.

வாகன ஓட்டுனர்கள் 23 ஆயிரம் பேரின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு 5 ஆயிரம் ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

சினிமா

10 hours ago

தொழில்நுட்பம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்