ஏழுமலையான் கோயிலில் மே 3 வரை தரிசனம் ரத்து

By என்.மகேஷ்குமார்

தேசிய அளவிலான ஊரடங்கு மே மாதம் 3-ம் தேதி வரைநீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் அதுவரை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்காக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த மார்ச் 20-ம் தேதி முதல், பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டது. இதுபோல் திருப்பதி தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் சுவாமி தரிசனம்ரத்து செய்யப்பட்டது. எனினும் இக்கோயில்களில் ஆகம விதிகளின்படி பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் தேசிய அளவிலான ஊரடங்கை மே 3-ம் தேதி வரை நீட்டிக்கும் அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி நேற்று வெளியிட்டார். இதையடுத்து ஏழுமலையான் கோயில், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில், நிவாச மங்காபுரம் பெருமாள் கோயில் என திருமலை திருப்பதிதேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் மே 3-ம் தேதி வரை பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

473 பேருக்கு கரோனா தொற்று

ஆந்திர மாநிலத்தில் இதுவரை473 பேருக்கு கரோனா வைரஸ்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலத்தில் அதிகபட்சமாக குண்டூர் மாவட்டத்தில் 109 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுபோல் கர்னூல்(91), கிருஷ்ணா (44) உள்ளிட்ட மாவட்டங்களில் நோய்த் தொற்றுஏற்பட்டுள்ளது. இதுவரை 9 பேர்இந்த நோய்த் தொற்றால் இறந்தனர். காகுளம் மற்றும் விஜயநகரம் மாவட்டத்தில் இதுவரை எவரும் பாதிக்கப்படவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

இந்தியா

21 mins ago

இந்தியா

48 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

உலகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்