100% ஊரடங்கு அவசியம்; கரோனா போரில் வெற்றி பெறுவது கடினமாகி விடும்: ஹர்ஷ வர்த்தன் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

ஊரடங்கு உத்தரவை 100 சதவீதம் கடைபிடிக்க வேண்டும் இல்லை என்றால் கரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவது கடினமாகி விடும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 30ம்- தேதி நீட்டிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தநிலையில் ஊரடங்கு குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்த்தன்
கூறியதாவது:
கரோனா என்பது இந்தியாவை மட்டுமல்லாமல் உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கரோனாவுக்கு எதிராக நாம் தீவிரமாக போராடி வருகிறோம். நாடுமுழுவதும் 100 சதவீதம் ஊரடங்கு அமலில் இருப்பதை மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் உறுதி செய்ய வேண்டும்.

ஒவ்வொரு மாநிலங்களிலும் அந்தந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் இதனை உறுதிப்படுத்த வேண்டும். இதில் நாம் பின்தங்கி விட்டால் கரோனாவுக்கு எதிரான போரில் நாம் வெற்றி பெறுவது கடினமாகி விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

25 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்