ஏப்ரல் 30-ம் தேதி வரை ரயில்களை இயக்க வேண்டாம்: பிரதமர் மோடிக்கு நவீன் பட்நாயக் கடிதம்

By செய்திப்பிரிவு

ஏப்ரல் 30-ம் தேதி வரை ரயில்களை இயக்க வேண்டாம் என மத்திய அரசை ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் வலியுறுத்தியுள்ளார்.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஏப்ரல் 30-ம் தேதி வரை ரயில்களை இயக்க வேண்டாம் என மத்திய அரசை ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு நவீன் பட்நாயக் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

நாடுமுழுவதும் கரோனா பரவுதல் இன்னமும் குறையவில்லை. இதனை கட்டுப்படுத்த சமூகவிலகல் என்பது மிகவும் அவசியமான ஒன்று. எனவே கட்டுப்பாடுகள் தொடர வேண்டும்.

ஏப்ரல் 30-ம் தேதி வரை ரயில்களை இயக்க வேண்டாம். விமான போக்குவரத்தையும் ஏப்ரல் 30-ம் தேதி வரை தொடங்க வேண்டாம்.

அதுபோலவே கல்வி நிறுவனங்களை ஜூன் மாதம் 17-ம் தேதிக்கு முன்னதாக திறக்க வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

13 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்