கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பிரதமர் நிவாரண நிதிக்கு மோடியின் தாயார் ஹிராபா தனது தனிப்பட்ட சேமிப்பு தொகையில் இருந்து 25 ஆயிரம் ரூபாயை அனுப்பியுள்ளார்.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் ஊழியர்களின் 2 நாட்கள் சம்பளத்தை வழங்கவுள்ளனர். மொத்தமாக 100 கோடி ரூபாய் வழங்கப்படும் என அந்த வங்கி இன்று அறிவித்துள்ளது.
கரோனா வைரஸ் பரவும் வேகம் இந்தியாவில் அதிகரித்துள்ளது. 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்திருப்பதால், இந்தியா முழுவதும் அத்தியாவசிய பணிகளைத் தாண்டி வேறு எந்தவொரு பணிகளுமே நடக்கவில்லை.
இதனால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், கரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்கான செலவுகள் என பல்வேறு சிக்கல்களில் தற்போது இந்தியா சிக்கியுள்ளது. இதனைச் சமாளிக்க PM CARES Fund-க்கு நிதியுதவி அளிக்குமாறு பிரதமர் மோடி தனது தனிப்பட்ட ட்விட்டர் கணக்கு மூலமாக ட்வீட் செய்தார்.
இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி அறிவித்த வங்கிக் கணக்கிற்குப் பலரும் நிதியுதவி அளிக்கத் தொடங்கினர். பிரதமர் மோடியின் அறிவிப்பைத் தொடர்ந்து, தொழிலதிபர்கள், திரையுலக பிரபலங்கள் என நிதியுதவிகளை அறிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் பிரதமர் மோடியின் தாயார் ஹிராபா பென் தனது தனிப்பட்ட சேமிப்பில் இருந்து 25 ஆயிரம் ரூபாயை பிரதமர் நிதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
25 mins ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
விளையாட்டு
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
விளையாட்டு
10 hours ago
இந்தியா
10 hours ago
விளையாட்டு
12 hours ago
இந்தியா
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago