கரோனா வைரஸ் முன்னெச்சரிக்க நடவடிக்கையைாக காலையில் நடை பயிற்சி வேண்டாம், 5 பேருக்கு மேல் கூட வேண்டாம் என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவுறுத்தியுள்ளார்.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கரோனா வைரஸ் பரவலில் இந்தியா தற்போதும் 2-ம் கட்டத்தில் இருப்பதால், அதற்குள் கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிரமான முயற்சிகளை எடுத்து வருகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை அறிவித்த மத்திய அரசு, திரையரங்குகள், மக்கள் கூடுமிடங்கள், ஷாப்பிங் மால்கள் போன்றவற்றை வரும் 31-ம் தேதிவரை திறக்கத் தடை விதித்தது.
மேலும், வரும் 22-ம் தேதி மக்கள் தாமாக முன்வந்து சுய ஊரடங்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். மார்ச் 22-ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தநிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இதுகுறித்து கூறியதாவது:
டெல்லியில் பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூட வேண்டாம். அப்படியே கூட வேண்டிய தேவை ஏற்பட்டாலும் ஒருவொருக்கொருவர் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு இருக்கவும். இதற்கு முன்பாக 20 பேருக்கு மேல் கூட வேண்டாம் என கோரி இருந்தோம். தற்போது கட்டுப்பாடுகளை அதிகமாக கடை பிடிக்க வேண்டிய தேவை இருப்பதால் இந்த புதிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளோம்.
காலையில் நடை பயிற்சி செய்ய வேண்டாம். வீடுகளிலேயே தங்கி இருங்கள். நம்முடைய பாதுகாப்பு மட்டுமின்றி பிறரின் பாதுகாப்பு கருதியும் இந்த சுயக்கட்டுப்பாட்டை கடை பிடிக்க வேண்டும்.
டெல்லியில் ஏராளமான தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அவர்களுக்காக கூடுதலாக ரேஷன் பொருட்கள் வழங்கவுள்ளோம். டெல்லி ரேஷன் கடைகள் மூலம் தற்போது ஒருநபருக்கு 5 கிலோ பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதனை 7.5 கிலோவாக உயர்ந்தி வழங்க உத்தரவிட்டுள்ளோம். டெல்லியில் மக்கள் ஊரடங்கை முன்னிட்டு நாளை 50 சதவீத பேருந்துகள் இயக்கப்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 hours ago
சினிமா
6 hours ago
இந்தியா
7 hours ago
தமிழகம்
8 hours ago
விளையாட்டு
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
தமிழகம்
8 hours ago
வாழ்வியல்
9 hours ago
தமிழகம்
9 hours ago
ஆன்மிகம்
8 hours ago
கருத்துப் பேழை
10 hours ago