டெல்லி குடியுரிமைச் சட்டத்தை எதிர்ப்பு நடந்த போராட்டத்தை தூண்டி விட்ட புகாரின் பேரில் தம்பதி ஒருவரை டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர்.
டெல்லி ஜாமியா பல்கலைக்கழகம் அமைந்துள்ள ஜாமியா நகரைச் சேர்ந்த ஜஹான்ஜீப் சமி மற்றும் அவரது மனைவி ஹினா பஷீர் பீக் ஆகிய இருவரை போலீஸார் இன்று கைது செய்தனர்.
ஆப்கானிஸ்தானில் உள்ள கோரசன் மாகாணத்தைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ் பிரிவுடன் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இவர்கள் காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் என்றும் டெல்லியில் தங்கியிருந்ததாகவும் முதல்கட்ட தகவல் தெரிவிக்கிறது.
டெல்லி குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தின்போது மக்களை தூண்டியதாக இவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் இவர்கள் டெல்லியில் தற்கொலை தாக்குதலைல நடத்த திட்டமிட்டதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் குடிமக்களின் தேசிய பதிவேடுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை கட்டமைப்பதில், ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் இவர்கள் சேர்ந்து திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
வாழ்வியல்
3 hours ago
இந்தியா
3 hours ago
விளையாட்டு
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
சினிமா
5 hours ago
இந்தியா
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
சினிமா
6 hours ago