உ.பி. பாஜக எம்.எல்.ஏ ரவிந்திர நாத் திரிபாதி மீது பாலியல் பலாத்கார வழக்கு 

By செய்திப்பிரிவு

உத்தரப் பிரதேச மாநில எம்.எல்.ஏ. ரவிந்திர நாத் திரிபாதி என்பவர் மீது 40 வயது பெண் ஒருவர் பாலியல் பலாத்காரப் புகார் அளித்துள்ளார். மேலும் இவரது குடும்பத்தினர் 6 பேர் மீதும் புகார் அளிக்க உ.பி.போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்தப் பெண் முதலில் எம்.எல்.ஏ.உறவினர் மீதுதான் புகார் அளித்திருந்தார், பிறகு எம்.எல்.ஏ. திரிபாதி பெயரையும் புகாரில் சேர்த்துள்ளார் என்று போலீஸார் தெரிவித்தனர்.

“எம்.எல்.ஏவின் நெருங்கிய உறவினர் சந்தீப் திவாரி என்பவர் இந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உறவு வைத்துக் கொண்டார் என்று புகார் அளிக்கப்பட்டது. பிற்பாடு இதே குற்றச்சாட்டை இந்தப் பெண் எம்.எல்.ஏ.மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் எழுப்பிப் புகார் அளித்தார். புகாரில் கூறப்பட்டுள்ள பெயர்கள் அனைவர் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது. விசாரணைக்காக தனி குழு அமைக்கப்பட்டுள்ளது” என்று போலீஸ் எஸ்.பி. ராம் பதன் சிங் தெரிவித்தார்.

எம்.எல்.ஏ.வின் உறவினர் ஒருவரை தான் ரயிலில் சந்தித்ததாகவும் அதனையடுத்து இருவருக்கும் நட்பு ஏற்பட்டதாகவும் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 6 ஆண்டுகள் தன்னை பலாத்காரம் செய்ததாகவும் அந்தப் பெண் தன் புகாரில் தெரிவித்துள்ளார்.

2017-ல் உ.பி. தேர்தலுக்கு முன்பாக விடுதி அறை ஒன்றில் தன்னை எம்.எல்.ஏ.வும், சந்திரபூஷன் திரிபாதி, தீபக் திவாரி, நிதிஷ் திவாரி, பிரகாஷ் திவாரி ஆகியோர் பாலியல் வன்கொடுமைச் செய்ததாகப் புகார் அளித்துள்ளார் அந்தப் பெண்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

45 mins ago

இலக்கியம்

6 hours ago

தமிழகம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்