அருணாச்சலப் பிரதேச முன்னாள் முதல்வரான கலிக்கோ புல் என்பவரின் மகன் ஷுபான்சோ புல் என்பவர் பிரிட்டனில் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
20 வயது ஷுபான்சோ புல் அங்கு பல்கலைக் கழகத்தில் படித்து வந்தார், இந்நிலையில் சசெக்ஸில் பிரைட்டன் என்ற இடத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றில் அவர் இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கலிக்கோவுக்கும் முதல் மனைவி தங்விம்சைக்கும் பிறந்தவர்தான் ஷுபான்சோ என்பது குறிப்பிடத்தக்கது. கலிக்கோவுக்கு மொத்தம் 3 மனைவிகள், இதில் 3வது மனைவி தசாங்க்லுவுக்கு பாஜக தேர்தல் டிக்கெட் அளிக்க அவரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
சிறிது காலம் முதல்வராக இருந்தவர் கலிக்கோ புல், ஆனால் இவரது முதல்வர் நியமனத்தை உச்ச நீதிமன்றம் நீக்கம் செய்ய, பதவியிலிருந்து இறங்க நேரிட்டது.
இந்நிலையில் ஆகஸ்ட் 9, 2016-ல் கலிக்கோ தனது நிதி விஹார் இல்லத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது, தற்போது இவரது மகனும் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளதால் மகனும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்நிலையில் ஷுபான்சு உடலை இந்தியாவுக்குக் கொண்டு வரும் முயற்சியில் அவரது குடும்பத்தினர் இந்தியத் தூதரக அதிகாரிகளுடன் பேசி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
வணிகம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
தொழில்நுட்பம்
3 hours ago
சினிமா
4 hours ago
க்ரைம்
4 hours ago
விளையாட்டு
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
இந்தியா
5 hours ago
க்ரைம்
6 hours ago