டெல்லி ஷாஹின்பாக்கில் மீண்டும் துப்பாக்கிச் சூடு: யாருக்கும் காயமில்லை

By பிடிஐ

டெல்லியில் ஷாஹின்பாக் போராட்டத்தையடுத்து 3 நாட்களில் 2வது முறையாக சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.

ஜாமியா மிலியா பல்கலைக்கழகம் அருகே 3 நாட்களுக்கு முன்னதாக நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டபடி ‘இங்குதான் சுதந்திரம்’ என்று கத்திய சம்பவத்துக்கு அடுத்தபடியாக சனிக்கிழமையான இன்று, ‘எங்கள் நாடு..’ கத்தியதாக தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஷாஹின்பாக்கில் சிஏஏவுக்கு எதிரான போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் போலீஸ் அருகாமையிலிருந்து இன்று ஒரு நபர் மீண்டும் 2-3 முறை சுட்டுள்ளதாக நேரில் பார்த்தவர்கள் தனியார் ஆங்கிலத் தொலைக்காட்சியில் தெரிவித்துள்ளனர்.

இந்த நபரை போலீஸார் பிடித்துச் சென்றனர். இன்று மாலை 4.53 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில் ஒருவருக்கும் காயமேற்படவில்லை.

வியாழனன்று நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மாணவர் ஒருவர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

சினிமா

14 mins ago

தமிழகம்

15 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

52 mins ago

இந்தியா

56 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்