மேற்கு வங்கத்தில் முன் அனுமதியின்றி குடியரசு தினத்தை முன்னிட்டு, 'பாரத மாத பூஜை' நிகழ்த்தியதற்காக போலீஸ் அதிகாரிகளுக்கும் பாஜகவினருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் பாஜக தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 23ம் தேதி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளின்போது காவல்துறை அனுமதியின்றி நடத்தப்படுவதாகக் கூறி பாரத மாதா பூஜைக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து பாஜகவினர் பாரத மாதாவுக்கான பூஜையை குடியரசு தினத்தில் வைத்துக்கொள்வதாக முடிவு செய்தனர்.
இன்று காலை ஹவுராவில் நடைபெற்ற இச்சம்பவத்தின் பாஜகவினரை கைது செய்ய போலீஸார் சென்றபோது மீண்டும் மோதல் வெடித்தது.
ட்விட்டர் பக்கத்தில் ஏஎன்ஐ வெளியிட்டுள்ள படங்களில் ஒரு இந்து பெண் தெய்வத்தின் பாணியில் இந்தியாவின் வரைபடத்தைக் கொண்டு மக்கள் பாரத் மாதாவுக்கு பிரார்த்தனை செய்வதைக் காணலாம், மற்றொரு படத்தில், பாஜக தொண்டர்கள் போலீஸ் வேனில் ஏற்றப்படுவதைக் காணலாம்.
மேற்கு வங்கத்தில் குடியரசுதின விழா கடுமையான பாதுகாப்புக்கு இடையே கொண்டாடப்பட்டது. மாநில ஆளுநர் ஜகதீப் தங்கர் கொல்கத்தாவின் ரெட் ரோட்டில் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட முதல்வர் மம்தா பானர்ஜி, தனது அமைச்சரவை சகாக்களுடன், கலந்துகொண்டார்.
கொல்கத்தாவின் சிவப்பு சாலையில், பல்வேறு மாணவர்களால் அழகான ஊர்வலங்கள் சென்றன, அதைத் தொடர்ந்து வந்த வாகனத்தில் நீர் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்த வாகனம் சென்றது.
விழாவில் மலைகள், சுந்தரவனக் காடுகள், ஜங்கல்மகால் பகுதிகளைச் சேர்ந்த நாட்டுப்புற கலைஞர்கள தங்கள் நடன நிகழ்ச்சியால் பார்வையாளர்களை கவர்ந்தனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
19 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
இலக்கியம்
8 hours ago
தமிழகம்
3 hours ago
இணைப்பிதழ்கள்
8 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago