பிரதமர் நரேந்திர மோடியை டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது டெல்லி போலீஸார் குறித்து பிரதமரிடம் புகார் தெரிவித்தார்.
டெல்லியில் போலீஸார் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி நகரை புதுப்பொலி வாக மாற்ற தனது அரசு உறுதி பூண்டுள்ளது என்றும் அதற்கு மத்திய அரசு ஒத்துழைக்க வேண்டு மென்றும் மோடியிடம் கேஜ்ரிவால் கேட்டுக் கொண்டார்.
டெல்லியில் கேஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ளது. அங்கு மத்திய அரசுக்கும் முக்கியமாக மத்திய அரசால் நியமிக்கப்பட்ட துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்குக்கும், டெல்லி மாநில அரசுக்கும் மோதல் ஏற்பட்டது.
இந்நிலையில் பிரதமரை கேஜ்ரிவால் சந்தித்துப் பேசியுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது. டெல்லி அரசுடன் போலீஸார் போர் நடத்துகிறார்கள். இது ஜனநாயகத் துக்கு கேடு விளைவிக்கக் கூடியது. முக்கியமாக டெல்லி போலீஸார் ஆளுநரிடம் அறிக்கை அளிக் கின்றனர். டெல்லி மாநில அரசிடம் அறிக்கை தருவதில்லை. இதுதான் பிரச்சினையை அதிகரிக்கிறது. இதனால் டெல்லியில் குற்ற நடவடிக்கைகளும் அதிகரித்துள் ளன. டெல்லி அரசு உத்தரவிட்டால் அதனை போலீஸார் ஏற்பது இல்லை என்று மோடியிடம் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.
மேலும், மோடியும் குஜராத் மாநில முதல்வராக இருந்தவர். அவருக்கு காங்கிரஸ் தலைமையி லான மத்திய அரசு எந்த அளவுக்கு நெருக்கடி அளித்தது என்பதை உணர்ந்திருப்பார்.
அதனால் ஆட்சி நடத்துவதில் அவர் பல சிரமங்களை எதிர்கொண்டிருப்பார். எனவே அவர் டெல்லி மாநில அரசின் பிரச்சினையையும் புரிந்து கொள்வார் என்ற நம்புகிறேன். உரிய நடவடிக்கை எடுப்பதாக என்னிடம் பிரதமர் உறுதியளித்துள்ளார் என்று செய்தியாளர்களிடம் கேஜ்ரிவால் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
சினிமா
4 hours ago
சுற்றுச்சூழல்
5 hours ago
உலகம்
5 hours ago
வாழ்வியல்
5 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
சினிமா
8 hours ago
க்ரைம்
8 hours ago
தமிழகம்
8 hours ago