நாடாளுமன்றத்தில் பதில் கூறாமல் ராகுல் காந்திக்கு சவால் விடுவதா? - அமித் ஷாவுக்கு ப.சிதம்பரம் கேள்வி

By செய்திப்பிரிவு

குடியுரிமைச் சட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்தபோது எந்த கேள்விக்கும் பதிலளிக்காத அமித் ஷா தற்போது ராகுல் காந்திக்கு சவால் விடுவது வேடிக்கையாக இருக்கிறது என ன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

இதுகுறித்து நேற்று கருத்து தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ‘‘காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் குடியுரிமைச் சட்ட விவகாரத்தில் வேண்டுமென்றே மக்களை தவறாக வழிநடத்துகின்றன. குழப்பத்தை ஏற்படுத்துகின்றன.

சிறுபான்மை மக்களின் குடியுரிமை பறிக்கப்படும் என திட்டமிட்டு வதந்தி கிளப்பப்படுகிறது. ராகுல் காந்திக்கு நான் சவால் விடுக்கிறேன். இதுபோன்ற ஒரு நிகழ்வையாவது அவர் நிரூபிக்க முடியுமா. இந்திய குடிமக்கள் யாருடைய குடியுரிமையாவது பறிக்கப்பட்டிருக்கிறதா’’ எனக் கூறினார்.

இந்தநிலையில் திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் சார்பில் நடந்த நிகழ்ச்சியி்ல முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:

‘‘குடியுரிமைச் சட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்தபோது எந்த கேள்விக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலளிக்கவில்லை. ஆனால் இப்போதே குடியுரிமைச் சட்டம் பற்றி விவாதிக்க தயாரா என ராகுல் காந்திக்கு அமித் ஷா சவால் விடுகிறார். அமித் ஷாவின் செயல்பாடு வேடிக்கையாக உள்ளது.’’ எனக் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

6 hours ago

ஓடிடி களம்

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்