பள்ளிகளுக்கு விடுமுறை என்று போலி அரசு உத்தரவு: 12ம் வகுப்பு மாணவர்கள் கைது 

By பிடிஐ

நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டாவில் டிசம்பர் 23 மற்றும் 24ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை என்று போலி அரசு உத்தரவை அச்சடித்து விநியோகித்ததாக +2 படிக்கும் 2 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அரசுப்பள்ளியைச் சேர்ந்த இந்த 2 மாணவர்களும் சிறார் நீதி வாரியத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறார் சீர்த்திருத்தப்பள்ளிக்கு அனுப்பப்பட்டனர்.

“மாவட்ட மேஜிஸ்ட்ரேட் கையெழுததை போலியாக இவர்களே போட்டு குளிர்கால விடுமுறை நீட்டிக்கப்படுகிறது” என்று அதில் தெரிவித்துள்ளனர் என்றார் மூத்த போலீஸ் அதிகாரியான வைபவ் கிருஷ்ணா.

கடும் குளிர் மற்றும் குடியுரிமை மசோதாவுக்கு எதிரான போராட்டங்களினால் பள்ளிகள் அங்கு விடுமுறையில் இருந்தன. இந்நிலையில் டிசம்பர் 22ம் தேதி இந்த போலி உத்தரவு ஆன்லைனில் வளைய வந்துள்ளது. வாட்ஸ் அப்பிலும் வைரலாகப் பரவியது. இந்தப் போலி உத்தரவினால் கடும் குழப்பம் ஏற்பட அரசு அதிகாரிகள் போலீஸில் புகார் செய்தனர்.

இதற்கிடையே நகர மேஜிஸ்ட்ரேட் அலுவலக வாசலில் கைது செய்ய மாணவர்களை விடுவிக்கக் கோரி சில மாணவர்கள் ஆர்பாட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

15 mins ago

சினிமா

25 mins ago

இந்தியா

33 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

5 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்