உ.பி. நீதிமன்றத்தில் குற்றவாளி கொலை: 18 போலீஸார் இடைநீக்கம்

By செய்திப்பிரிவு

உ.பி. நீதிமன்றத்தில் கொலை குற்றவாளி கொல்லப்பட்ட விவகாரத்தில் 18 போலீஸாரை அம்மாநில அரசு இடைக்கால பணிநீக்கம் செய்துள்ளது.

உ.பி.யின் பிஜ்னோர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் கொலை வழக்கு ஒன்றை நீதிபதி விசாரித்துக் கொண்டிருந்தார். அப்போது நீதிமன்ற அறைக்குள் புகுந்த 3 பேர், குற்றவாளிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஷாநவாஸ் என்ற குற்றவாளி அதே இடத்தில் இறந்தார். 2 போலீஸார் காயம் அடைந்தனர். இந்த குழப்பத்தில் மற்றொரு குற்றவாளி அங்கிருந்து தப்பினார். துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட மூவரும் பின்னர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் பணியில் கவனக்குறைவாக இருந்ததாக, நீதிமன்ற வளாக புறக்காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 5 பெண்கள் உள்ளிட்ட 17 போலீஸ் காவலர்கள் நேற்று இடைக்கால பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

9 mins ago

சினிமா

50 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

ஆன்மிகம்

3 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

மேலும்