மக்களை தவறான திசையில் வழிநடத்துகிறார்.. மோடி மீது மன்மோகன் சிங் கடும் விமர்சனம்

By ஏஎன்ஐ

தொடர்ந்து 6 ஆண்டுகளாக மக்களை பிரதமர் மோடி தவறான திசையில் வழிநடத்துவதாக சாடியுள்ளார் முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங்.

டெல்லியில் இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் பாரதத்தைப் பாதுகாப்ப்போம் (பாரத் பச்சாவோ) பேரணி நடைபெற்றது.

இதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் பேசினர். அப்போது பேசிய மன்மோகன் சிங், "ஆறு ஆண்டுகளுக்கு முன்னதாக மோடி மக்களிடம் போலியான வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சியைப் பிடித்தார். 2024-ல் இந்தியப் பொருளாதார 3 ட்ரில்லியன் இலக்கை எட்டும் என்றார்.

விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என்றார். இளைஞர்களுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு என்றார். ஆனால், இன்று அவர் அளித்த வாக்குறுதிகள் எல்லாமே போலியானவை என்பது நிரூபணமாகியுள்ளது.

அவரோ, 6 ஆண்டுகளாக மக்களை அவர் தவறாக வழிநடத்திச் செல்கிறார்.

இத்தருணத்தில் மக்கள் காங்கிரஸின் கரங்களை வலுப்படுத்த வேண்டும். சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு ஆதரவு அளிக்க வேண்டும்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

41 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

ஆன்மிகம்

3 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

மேலும்