ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டில் சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் திஹார் சிறையில் இருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீது டெல்லி உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி சிபிஐ அமைப்பால் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார். சிபிஐ விசாரணை முடிந்த நிலையில் திஹார் சிறையில் அடைக்கப்பட்ட சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இதனிடையே ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டில் சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கு தொடர்பாக ப.சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கடந்த அக்டோபர் 16-ம் தேதி கைது செய்தனர். அமலாக்கப் பிரிவு காவல் முடிந்த நிலையில் நவம்பர் 13-ம் தேதி வரை சிதம்பரத்தை நீதிமன்றக் காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்றக் காவல் கடந்த புதன்கிழமை முடிந்த நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சிதம்பரத்துக்குக் காவலை வரும் 27-ம் தேதி வரை நீட்டித்துச் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கிடையே சிதம்பரம் கைது செய்யப்பட்ட ஆகஸ்ட் 21-ம் தேதியிலிருந்து அவருக்குப் பல முறை உடல்நலக் குறைவு ஏற்பட்டு 4 மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகச் சென்றுள்ளார். அவரின் உடல் எடையும் 8 கிலோ வரை குறைந்துவிட்டது. சிறையில் அவருக்கு போதுமான அளவு கவனிப்பு இல்லை என்று அவரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், சிதம்பரம் தனது உடல்நலக் குறைவைக் காரணம் காட்டி தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி அவரின் வழக்கறிஞர் கபில் சிபல் மூலம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீது அமலாக்கப் பிரிவு, சிதம்பரம் தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் தீர்ப்பை நீதிபதி ஒத்திவைத்திருந்தார்.
இந்நிலையில் சிதம்பரம் ஜாமீன் மனு மீது டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ் கெய்த் இன்று தீர்ப்பு வழங்க உள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
2 hours ago