காஷ்மீரில் பெரும்பாலான இடங்களில் மக்களுக்கு கட்டுப்பாடுகள் நீக்கம்: தனியார் வாகனங்கள் செல்லஅனுமதி

By செய்திப்பிரிவு

ஸ்ரீநகர்,

காஷ்மீரில் நேற்று வெள்ளிக்கிழமை தொழுகையின் போது வன்முறை நிகழக்கூடும் என முன்னெச்சரிக்கைய நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்டு இருந்த ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டு, கட்டுப்பாடுகள் பெரும்பாலான இடங்களில் இன்று நீக்கப்பட்டன.

இதனால் மக்கள் எளிதாக அனைத்து இடங்களுக்கும் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டனர், தனியார் வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் நேராமல் தவிர்க்கும் பொருட்டு போலீஸார், பாதுகாப்புப் படையினர் வழக்கம் போல் ரோந்துப் பணியிலும், பாதுகாப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, அரசியலமைப்பு 370-ம் பிரிவையும் திரும்பப் பெற்றது. மாநிலத்தை லடாக், ஜம்மு காஷ்மீர் என இரு பிரிவுகளாகப் பிரித்து யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு அறிவித்தது.

கடந்த 5-ம் தேதியில் இருந்து காஷ்மீரில் பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில நிர்வாகம் விதித்துள்ளது. தொலைபேசி, செல்போன், இன்டர்நெட் சேவை, நாளேடுகள், ஊடகங்களுக்கு கட்டுப்பாடு போன்றவை கொண்டுவரப்பட்டதால் மக்கள் வெளியுலக தொடர்பு இல்லாமல் இருந்தனர்.

எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் நடப்பதை தவிர்க்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் கொண்டுவரப்பட்டன. ஆனால், கடந்த சில நாட்களாக இந்த பாதுகாப்பு கெடுபிடிகள் தளர்த்தப்பட்டு படிப்படியாக இயல்புநிலைக்கு மக்கள் வருகின்றனர்.

இருப்பினும் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டபோதிலும் மாணவர்களை அனுப்ப பெற்றோர் தயங்குகின்றனர். கடைகள், வர்த்தக நிறுவனங்கள் இன்னும் முழுமையாக திறக்கப்படவில்லை. செல்போன், இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டநிலையில் லேண்ட் லைன் சேவை மட்டும் இயக்ககப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது வழக்கமாக காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு படையினர் மீது கல்வீச்சு சம்பவங்கும், தாக்குதல்களிலும் பிரிவினைக்கு ஆதரவான மக்கள் ஈடுபடுவார்கள். அந்தவகையில் யாரும் ஈடுபடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதிய கட்டுப்பாடுகளை பாதுகாப்பு படையினர் விதித்திருந்தனர்.

இந்த கட்டுப்பாடுகளை போலீஸார், பாதுகாப்புப்படையினர் இன்று தளர்த்தினர். சாலைகளில் வைக்கப்பட்டு இருந்த தடுப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டு மக்கள் போக்குவரத்துக்கு இடம் ஒதுக்கப்பட்டன.

இருப்பினும் பெரும்பாலான இடங்களில் இன்னும் கடைகள், வர்த்த நிறுவனங்கள் அடைக்கப்பட்டுக் கிடக்கின்றன. மக்கள் நடமாட்டம் இருந்தபோதிலும் முழுமையான இயல்புநிலைக்கு இன்னும் மக்கள் திரும்பவில்லை. இதனால் 27-வது நாளாக காஷ்மீரில் இயல்புநிலை தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் நிருபர்களிடம் கூறுகையில், " காஷ்மீரில் பெரும்பாலான இடங்களில் பாதுகாப்பு படையின் கெடுபிடிகள், கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுவிட்டன. இருப்பினும் இன்னும் கடைகள் திறக்க மக்கள் அச்சப்படுகின்றனர். பள்ளிக்கூடத்துக்கும் பிள்ளைகளை அனுப்ப பெற்றோர் தயங்குகின்றனர்

தனியார் வாகனங்களும், ஆம்புலன்ஸ்கள் மட்டுமே இயங்கி வருகின்றன. அரசுப்பேருந்துகள் கூட இயக்கப்படவில்லை. பெரும்பாலான இடங்களில் லேண்ட்லைன் தொலைப்பேசி செயல்பாட்டுக்கு வந்துவிட்டது.ஆனால், லால் சவுக், பிரஸ் என்க்ளேவ் ஆகிய இடங்களில் இன்னும் தொலைபேசி இணைப்பு வழங்கப்படவில்லை.

மொபைல் சேவை, இன்டர்நெட், பிஎன்என்எல் பிராண்ட்பேண்ட் சேவை தொடர்ந்து கடந்த 5-ம் தேதியில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 mins ago

தமிழகம்

8 mins ago

தமிழகம்

29 mins ago

உலகம்

35 mins ago

ஆன்மிகம்

33 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

41 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

2 hours ago

மேலும்