யாரோ சிலரை மகிழ்ச்சிபடுத்த நடைபெறும் நாடகம்: கார்த்தி சிதம்பரம் விமர்சனம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி
யாரோ சிலரை மகிழ்ச்சி படுத்துவதற்காக புலனாய்வு ஏஜென்சிகள் செய்யும் உணர்ச்சிகரமான நாடகம் என சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சூழ்ந்துள்ளது குறித்து அவரது மகன் கார்த்தி சிதம்பரம் வர்ணித்துள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு சட்டவிரோதமாக முதலீடு பெற அனுமதித்த வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு எதிராக சிபிஐ, அமலாக்கப்பிரிவு வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றன.

இந்த வழக்கில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவையும் டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இதையடுத்து, அவரைக் கைதுசெய்ய சிபிஐ தீவிரம் காட்டி வருகிறது.

டெல்லியில் உள்ள ப.சிதம்பரத்தின் வீட்டை சுற்றி வளைத்த சிபிஐ அதிகாரிகளுக்கு உள்ளே செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. இதையடுத்து சுவர் ஏறிக்குறித்து சிபிஐ அதிகாரிகள் உள்ளே சென்றனர்.

இதுகுறித்து கார்த்தி சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ‘‘யாரோ சிலரை மகிழ்ச்சி படுத்துவதற்காக புலனாய்வு ஏஜென்சிகள் செய்யும் உணர்ச்சிகரமான நாடகம்’’ எனக் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

தமிழகம்

17 mins ago

இந்தியா

35 mins ago

இந்தியா

42 mins ago

தமிழகம்

40 mins ago

இந்தியா

42 mins ago

வணிகம்

56 mins ago

இந்தியா

56 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

சினிமா

4 hours ago

மேலும்