பாகிஸ்தானுடன் எப்போது பேச்சுவார்த்தையைத் தொடங்குவீர்கள் என கேள்வி எழுப்பிய அந்நாட்டு நிருபரிடம் கைகுலுக்கி இந்தியாவின் நிலைப்பாட்டை சுவாரஸ்யமாக எடுத்துச் சொன்னார் ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் சயீது அக்பருதீன்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட் டத்தில் காஷ்மீர் விவகாரம் குறித்து நேற்று ஆலோசிக்கப்பட்டது. மூடிய அறையில் இந்த ஆலோசனை நடத்தப்பட்டது.
அந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அக்பருதீனிடம் பாகிஸ்தான் நிருபர் ஒருவர் எப்போது பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்குவீர்கள் எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அக்பருதீன் தான் நின்று கொண்டிருந்த இடத்திலிருந்து நிருபர்கள் நிற்கும் இடத்திற்குச் சென்று கேள்வி எழுப்பிய பாகிஸ்தான் நிருபர் அருகிலே சென்று, "நான் உங்களருகில் வந்து கைகுலுக்கி இதை தொடங்கிவைக்கிறேன். சிம்லா உடன்படிக்கைக்கு ஒத்துழைப்பதே இந்தியாவின் நிலைப்பாடு என்பதை நாங்கள் நேசக்கரத்தை நீட்டி ஏற்கெனவே வலியுறுத்திவிட்டோம். இதில் பாகிஸ்தானே தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்கக் காத்திருப்போம்" என்றார்.
சயீது அக்பருதீன் அங்கிருந்த 3 பாகிஸ்தான் பத்திரிகையாளர்களிடமும் கைகுலுக்கினார். இந்திய தூதரின் இந்த செயல் அங்கிருந்தவர்களை நட்புடன் புன்னகைக்கச் செய்தது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
15 mins ago
இந்தியா
23 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
விளையாட்டு
3 hours ago