புதுடெல்லி
நாட்டின் 73-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. இதனை யொட்டி, நேபாளம், மாலத்தீவு, பூடான் ஆகிய நாடுகளின் தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கும், இந்திய மக்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமது சோலிஹ் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்திய மக்களுக்கு இனிய சுதந்திர தின வாழ்த்துகளை மாலத் தீவு மக்கள் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். மாலத்தீவுக்கு அண்டை நாடாக மட்டுமல்லாமல் மிகச் சிறந்த நட்பு நாடாகவும் இந்தியா விளங்கி வருகிறது. சர்வதேச அளவில் நெருங்கிய நட்பு நாடுகளாக இந்தியாவும், மாலத்தீவும் உள்ளன. இந்த உறவு மேலும் வலுப்பட இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாள பிரதமர் கே.பி. சர்மா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
சுதந்திரம் அடைந்த இந்த 73 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்திருக்கிறது. அண்டை நாடு என்ற முறையில், இந்தியாவின் வளர்ச்சி நேபாளத் துக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும், அந்நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகள் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேபோல், பூடான் பிரதமர் ஷெரிங் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “இந்தியாவுக்கும், பூடானுக்கும் இடையே நட்புக் கான புதிய அத்தியாயம் தொடங்கி யுள்ளது. இந்திய மக்களுக்கு இதயம் கனிந்த சுதந்திர தின நல்வாழ்த்துகள்” எனக் குறிப்பிடப் பட்டுள்ளது. - பிடிஐ
முக்கிய செய்திகள்
இணைப்பிதழ்கள்
11 hours ago
தமிழகம்
23 mins ago
தமிழகம்
29 mins ago
சுற்றுலா
51 mins ago
தமிழகம்
56 mins ago
தமிழகம்
1 hour ago
உலகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
வாழ்வியல்
2 hours ago