கொச்சி
கேரளாவின் கொச்சி நகரில் உள்ள பிராட்வே பகுதியில் துணி வியாபாரம் செய்பவர் நவ்ஷாத். நடைபாதை வியாபாரியான இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கேரளாவில் வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட மக்களுக்கு 10 மூட்டை புதிய துணிமணிகள் கொடுத்து உதவியுள்ளார். துணிகளை சேகரித்த தன்னார்வலர்கள் இதனை வீடியோ படம் பிடித்து சமூக வலைதளங் களில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ வலைதளங்களில் வைரலா கியது. கேரளாவின் ஹீரோ என மக் கள் இவரை புகழ்ந்து வருகின்றனர்.
பக்ரீத் பண்டிகை வியாபாரத்துக் காக புதிய துணிகளை நவ்ஷாத் வாங்கி வைத்திருந்தார். வெள்ளத் தால் பாதிக்கப்பட்டோருக்கு மக்கள் உதவத் தயங்குவதைக் கண்டு, தன்னார்வலர்களை தனது கிடங்குக்கு அழைத்து அனைத்து துணிகளையும் வழங்கியுள்ளார்.
நடிகர் ராஜேஷ் தலைமை யிலான தன்னார்வலர்கள் குழு, இந்த துணிகளை சேகரிக்கும்போது அதனை படம் பிடித்து சமூக வலை தளங்களில் வெளியிட்டுள்ளது. “இறக்கும்போது யாரும் எதையும் கொண்டு செல்லமுடியாது. கஷ்டப் படுவோருக்கு உதவும்போது அதற்கான பலனை நான் பெறுவேன்” என்றார் நவ்ஷாத்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
விளையாட்டு
6 hours ago
இந்தியா
7 hours ago
விளையாட்டு
8 hours ago
இந்தியா
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
ஜோதிடம்
9 hours ago
ஜோதிடம்
10 hours ago
ஜோதிடம்
10 hours ago