நிலச்சரிவு காரணமாக ஆக.,23 வரை 10 ரயில்கள் ரத்து: தென் மேற்கு ரயில்வே அறிவிப்பு

By செய்திப்பிரிவு

மைசூர் ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட ஹசன் - மங்களூரு பகுதிகளுக்கு இடையே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் வரும் 23-ம் தேதி 10 ரயில்களை ரத்து செய்வதாக தென் மேற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "ஷக்லேஸ்பூர் - சுப்ரமண்ய சாலை இடையே ரயில் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களில் 30 இடங்களில் நிலச்சரிவுகள், பாறை உருண்டு விழுந்த சம்பவங்கள் நடந்துள்ளன. ஆங்காங்கே தண்டவாளங்களில் மரம் முறிந்து விழுந்து கிடக்கின்றன.

இந்நிலையில், மாநில அரசு அடுத்த 2 நாட்களுக்கு மழை இருப்பதாக முன்னறிவிப்பு விடுத்துள்ளது. இந்நிலையில், முன்னெச்சரிக்கையாக இந்த மார்க்கத்தில் வரும் ஆகஸ்ட் 23-ம் தேதி வரை 10 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

ரயில் எண் 16515 யெஷ்வந்த்பூர் - கார்வார் ரயில், ரயில் எண் 16516 கார்வார் - ஹெஷ்வந்த்பூர் ரயில், ரயில் எண் 16511 / 16513 கே.எஸ்.ஆர். பெங்களூரு - கண்ணூர் / கார்வார் எக்ஸ்பிரஸ், ரயில் எண் 16517/16523 கேஎஸ்ஆர் பெங்களூருவில் இருந்து செல்லும் கண்ணூர் / கார்வார் எக்ஸ்பிரஸ், ரயில் எண் 16512/16514 கண்ணூர்/கார்வார் முதல் கேஎஸ்ஆர் பெங்களூரு வரையிலான எக்ஸ்பிரஸ், ரயில் எண் 16518/16524, ரயில் எண் 16575, ரயில் எண் 16576, ரயில் எண் 16585, ரயில் எண் 16586 ஆகியன ரத்து செய்யப்படுகின்றன" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 mins ago

தமிழகம்

26 mins ago

விளையாட்டு

34 mins ago

தமிழகம்

49 mins ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

சுற்றுலா

37 mins ago

தொழில்நுட்பம்

28 mins ago

மேலும்