புதுடெல்லி
திரிபுராவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்றுள்ளதை பிரதமர் மோடி சுட்டிகாட்டி மற்ற மாநில பாஜக தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
திரிபுராவில் கடந்த 27-ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பாஜக, இடதுசாரி கூட்டணி, காங்கிரஸ் ஆகியவை தனித்தனியாக போட்டியிட்டன. இந்த தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்றுள்ளது.
பாஜகவின் இந்த வெற்றியை அம்மாநில முதல்வர் பிப்லப் தேவ் குமார் பெருமிதத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதனை ‘டேக்’ செய்து பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார். அதில் பிரதமர் மோடி கூறியுள்ளதாவது:
‘‘திரிபுரா மக்கள் பாஜக மீது நம்பிக்கை வைத்து மீண்டும் ஒரு மகத்தான வெற்றியை அளித்துள்ளனர். திரிபுராவின் கிராமப்புறங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சி திட்டங்களுக்கு மக்கள் அளித்துள்ள ஆதரவு வெளிப்படுகிறது. கடுமையாக உழைத்த திரிபுரா பாஜகவினருக்கு எனது வாழ்த்துக்கள்.
I would urge @BJP4India Karyakartas from other states to interact with Karyakartas from Tripura. The Party’s repeated successes in the state demonstrate the power of development politics and democratic temperament. It also shows that with the right effort, everything is possible.
— Narendra Modi (@narendramodi) August 2, 2019
திரிபுராவில் வளர்ச்சி அரசியலை முன்னெடுக்கும் பாஜக தொடர்ந்து வெற்றிகளை குவித்து வருகிறது. சரியான முறையில் முயற்சி மேற்கொண்டால் எதுவும் சாத்தியமே. நாட்டின் மற்ற பகுதி பாஜக தொண்டர்கள், திரிபுரா தொண்டர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்’’ எனக் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
15 mins ago
ஜோதிடம்
30 mins ago
ஜோதிடம்
45 mins ago
ஜோதிடம்
58 mins ago
வாழ்வியல்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
க்ரைம்
1 hour ago
இந்தியா
1 hour ago
சுற்றுலா
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago