பாஜகவில் சேரத் தயாராகும் காங்கிரஸ், என்.சி. எம்எல்ஏ.க்கள்

By செய்திப்பிரிவு

மும்பை

மகாராஷ்டிர நீர்வளத் துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான கிரிஷ் மகாஜன் மும்பையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

மகாராஷ்டிராவில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் (என்சி) கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் 50 பேர் பாஜகவுடன் தொடர்பில் உள்ளனர். மகாராஷ்டி ராவில் சட்டப்பேரவைத் தேர்த லுக்கு முன்னதாக பாஜகவில் சேரத் தயாராக இருப்பதாக அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ், தேசியவாத காங் கிரஸ் மீது அக்கட்சியினரே நம்பிக்கை இழந்துவிட்டனர். அக்கட்சிகள் விரைவில் மேலும் பலவீனமடையும்.

எதிர்க்கட்சியினரை கட்சித் தாவ வைக்க அரசு இயந்திரத்தை பாஜக முறைகேடாகப் பயன்படுத்துகிறது என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறுவது அடிப்படையற்றது. தனது சொந்த அரசியல் தோல்வியை மறைப்பதற் காக இதுபோன்ற குற்றச்சாட்டை அவர் கூறுகிறார்.

இவ்வாறு கிரிஷ் மகாஜன் தெரிவித்தார். முன்னதாக என்சி கட்சியின் மும்பை நகர தலைவர் சச்சின் ஆஹிர், சிவசேனாவில் சேர்ந்தார். அதே கட்சி எம்எல்ஏ வைபவ் பிச்சாட் பாஜகவில் சேர விருப்பம் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

5 hours ago

தமிழகம்

12 mins ago

சினிமா

22 mins ago

இந்தியா

30 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

5 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்