இங்கிலாந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள, தொழிலதிபரும் வைரவியாபாரியுமான நீரவ் மோடிக்கு வரும் ஆகஸ்ட் 22ம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டித்து இங்கிலாந்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.15 ஆயிரம் கோடி கடன் பெற்று லண்டனுக்கு தப்பியோடிய நீரவ் மோடி ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் சிறையில் அடைக்கப்பட்டார்.
வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிபதி அர்புத்நாட், வாண்ட்ஸ்வொர்த் சிறையில் உள்ள நீரவ் மோடியிடம் குறுகிய கால விசாரண வீடியோதொடர்பு வழியாக நடத்தினார்.
இதனை அடுத்து குறுகிய கால விசாரணைக் கைதியாக இருந்த நீரவ் மோடி நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். நீதிமன்றக் காவல் ஆகஸ்ட் 22 வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
பஞ்சாப் நேஷ்னல் வங்கி மோசடி மற்றும் நிதிமுறகேடுகள் வழக்கு தொடர்பாக கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டதிலிருந்து தென்மேற்கு லண்டனில் உள்ள வாண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நீரவ் மோடி போலீஸாரால் கைது செய்து நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படும் முன் தனக்குரிய பிணையை பெற்றுவிடுவார் என்றும் அதன்பின்பு தான் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும் பணிகள் தொடங்கும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நீரவ் மோடியின் ஜாமீன் மனு கடந்த மாதம் நான்காவது முறையாக இங்கிலாந்து உயர்நீதிமன்றம் நிராகரித்ததை அடுத்து. இதனால் வேறுவழியின்றி அவர் முதல் முறையாக ஆஜரானார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 mins ago
தமிழகம்
25 mins ago
தமிழகம்
4 hours ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
4 hours ago
விளையாட்டு
1 hour ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
3 hours ago