மாநிலங்களவையில் பிரியா விடை: ஜெயலலிதாவை எண்ணி கண்ணீர் விட்டு அழுத மைத்ரேயன்; வீடியோ

By செய்திப்பிரிவு

புதுடெல்லி

மாநிலங்களவை அதிமுக எம்.பி. மைத்ரேயனின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில், அவையில் இறுதி உரையாற்றினார். அப்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதா தன் மீது வைத்திருந்த நம்பிக்கையை குறிப்பிட்டு கண்ணீர் விட்டு அழுதார். சக எம்.பி.க்கள் அவரை ஆசுவாசப்படுத்தினர்.

தமிழகத்தில் அதிமுக சார்பில் மூன்றாவது முறையாக மாநிலங்களவை எம்.பி.யாக பதவி வகித்து வருபவர். மைத்ரேயன்.  மைத்ரேயனின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. சுமார் பதினான்கரை ஆண்டு காலம் பணியாற்றிய மைத்ரேயன் பாஜகவில் இருந்து அதிமுகவிற்கு வந்தவர்.

இதனால், அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவின் மூத்த தலைவர்களுடன் நல்ல நட்பு உள்ளது. மாநிலங்களவையில் இருந்து விடைபெறுவதை முன்னிட்டு சில நாட்களுக்கு முன்பு மைத்ரேயன் பிரதமர் மோடியை சந்தித்தார்.
இந்தநிலையில் மைத்ரேயனுக்கு மாநிலங்களவையில் இன்று பிரியா விடை அளிக்கப்பட்டது.
அப்போது பேசிய அவர் ‘‘மறைந்த முதல்வர் ஜெயலலிதா என் மீது மிகுந்த அன்பு காட்டினார். என் மீது நம்பிக்கை வைத்து 3 முறை மாநிலங்களவை எம்.பி.யாக்கினார். இது வேறு யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு. அவரை இந்த நேரத்தில் எண்ணிப் பார்ககிறேன்’’ என பேசினார். அப்போது தாங்க முடியாமல் அழுதார். 

உடனடியாக சக எம்.பி.க்கள் அவரை ஆசுவாசப்படுத்தி அமர வைத்தனர். மைத்ரேயனை போலவே மற்ற 5 எம்.பி.க்களும் மாநிலங்களவையில் இன்று உரையாற்றி விடை பெற்றனர். 
 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

விளையாட்டு

28 mins ago

இந்தியா

54 mins ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

உலகம்

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்