புதுடெல்லி
மத்திய அரசு ‘பெண் குழந்தை களைக் காப்போம்…பெண் குழந் தைகளை படிக்க வைப்போம்’ என்ற தாரக மந்திரத்துடன் பெண் குழந்தைகள் பாதுகாப்புக்கு முக் கியத்துவம் அளித்து வருகிறது.
இந்நிலையில் உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத் திலுள்ள 132 கிராமங்களில் கடந்த 3 மாதங்களில் ஒரு பெண் குழந்தை கூட பிறக்கவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி யுள்ளது.
அந்த 132 கிராமங்களில் சமீபத் தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதில் கடந்த 3 மாதங்களில் அங்கு மொத்தம் 216 குழந்தைகள் பிறந்துள்ளன என்பதும் இதில் ஒரு குழந்தை கூட பெண் குழந்தை இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து உத்தரகாசி மாவட்ட ஆட்சியர் ஆசிஷ் சவு கான் கூறும்போது, “உத்தரகாசி மாவட்டத்தில் பல்வேறு கிராமங் களில் ஆய்வு நடத்தியபோது அங்கு பெண் குழந்தைகளே பிறக்க வில்லை என்பதும், சில இடங்களில் ஒரு சில பெண் குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளதும் தெரிய வந்துள்ளது. இந்தப் பகுதிகளை நாங்கள் கண்காணித்து வரு கிறோம். அந்தப் பகுதிகளில் கண்காணிப்பைத் தீவிரப் படுத்துமாறு சுகாதாரத்துறை ஊழி யர்களான ஆஷா ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கருவில் இருக்கும் சிசு ஆணா பெண்ணா எனக் கண்டறிந்து பெண் கருவைக் கலைக்கும் செயல் அந்த கிரா மங்களில் நடைபெறுகிறதா என்பது கண்காணிக்கப்படும்” என்றார்.
இதுகுறித்து சமூக சேவகர் கல்பனா தாக்குர் கூறும்போது, “இந்த 132 கிராமங்களில் பெண் குழந்தைகளே பிறக்கவில்லை என்பது கவனிக்கக்கூடிய விஷய மாகியுள்ளது. இங்கு கர்ப்பத்தில் இருப்பது பெண் குழந்தையா எனக் கண்டறிந்து அதை கலைக்கும் சம்பவங்கள் நடைபெறுகிறதா என்பதை விசாரிக்கவேண்டும். பெண் குழந்தை பிறப்பே இல்லை என்பது தற்செயலானது அல்ல.இந்த விஷயத்தில் அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்றார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 mins ago
வாழ்வியல்
13 mins ago
ஓடிடி களம்
23 mins ago
தமிழகம்
39 mins ago
தமிழகம்
58 mins ago
தொழில்நுட்பம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
1 hour ago
ஓடிடி களம்
2 hours ago