அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மக்களவை சபாநாயகர் அழைப்பு

By பிடிஐ

மக்களவையை சுமுகமாக நடத்துவது தொடர்பாக விவாதிக்க நாளை (வியாழக்கிழமை) அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார் சபாநாயகர் சுமித்ரா மகாஜன்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 21-ம் தேதி தொடங்கியது. இத்தொடர் ஆகஸ்ட் 13-ம் தேதி வரை நீடிக்கும்.

இந்நிலையில், கடந்த வாரம் முழுவதும் வியாபம் ஊழல் விவகாரம், லலித் மோடி சர்ச்சை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களால் நாடாளுமன்றத்தின் இருஅவைகளும் முடங்கின. குறிப்பாக மக்களவையில் காங்கிரஸ் கட்சியினர் பிரதமருக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்தே மக்களவை சபாநாயகர் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் குற்றச்சாட்டு:

இதற்கிடையில், காங்கிரஸ் உறுப்பினர்கள் மக்களவை தொலைக்காட்சியில் எதிர்க்கட்சியினர் போராட்டம் திட்டமிட்டு ஒளிபரப்பப்படாமல் இருட்டடிப்பு செய்யப்படுவதாக குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

உலகம்

4 hours ago

வாழ்வியல்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

சினிமா

7 hours ago

க்ரைம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்