‘வியாபம்’ ஊழல் வழக்கில் முக்கிய குற்றவாளியின் பல கோடி சொத்து முடக்கம்: அமலாக்கப் பிரிவு நடவடிக்கை

By செய்திப்பிரிவு

‘வியாபம்’ வழக்கில் முக்கிய குற்ற வாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜெகதீஷ் சாகர் என்பவரின் 14 சொத்துகளை அமலாக்கப்பிரிவு முடக்கியுள்ளது.

கல்வி நிறுவனங்களில் சேர்க்கை மற்றும் அரசுப் பணி களில் சேர்வதற்கு பணம் பெற்றுக் கொண்டு உதவியதாக ஜெகதீஷ் சாகர் என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கைது செய் யப்பட்டுள்ள ஜெக தீஷ் சாகர் தற்போது சிறையில் அடைக்கப் பட்டுள்ளார்.

முறைகேடாக ஈட்டிய பணத்தை அவர் வங்கிகளில் பல்வேறு கணக்குகளில் குறித்த கால வைப்பு நிதியாக வைத்துள்ளார். அந்த பணத்தை ஈடாகக் காட்டி வங்கிகளில் கடன்பெற்று சொத்து வாங்கியுள்ளார். அவ்வாறு சொத்து வாங்கப்பட்டதை வியாபம் முறைகேட்டால் வாங்கப் பட்டவை என்பதை வெளிப்படுத்து வதற்கு போதுமான ஆதாரங்கள் அமலாக்கப்பிரிவுக்கு கிடைத் துள்ளதாகக் கூறப்படுகிறது.

4.8 ஏக்கர் நிலம், ரூ.3.3 கோடி ரொக்கம், நகைகள், 4 சொகுசு கார்கள் உள்ளிட்ட சாகரின் சொத்து களை அமலாக்கப்பிரிவு முடக்கி யுள்ளது. ‘வியாபம்’ இயக்குநர் பங்கஜ் திரிவேதி, முன்னாள் கணினி பகுப்பாளர் நிதின் மகிந்திரா உள்ளிட்டோரின் பரிவர்த்த னைகளை அமலாக்கப்பிரிவு ஆய்வு செய்து வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

5 hours ago

இந்தியா

37 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்