பெங்களூரு உயிரியல் பூங்காவில் யானை தாக்கி பெண் ஊழியர் இறந்தார். மற்றொரு ஊழியர் காயம் அடைந்தார்.
பெங்களூரு அருகே பன்னார கட்டா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு ஊழியர்கள் சிலர் நேற்று முன்தினம் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காட்டு யானைகள் திடீரென துரத்தியதால் ஊழியர்கள் அஞ்சி ஓடினர். இதில் மகேஸ்வரி (20), நாகம்மா (50) ஆகிய இருவரும் யானையிடம் சிக்கிக்கொண்டு தாக்குதலுக்கு ஆளாகினர். இவர்களை மீட்ட வனத் துறையினர் பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்நிலையில் தலையிலும் முதுகிலும் பலத்த காயம் அடைந்த நாகம்மா சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். மார்பில் காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள மகேஸ்வரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பன்னாரகட்டா உயிரியல் பூங்கா வில் கடந்த 6 மாதங்களில் 4 ஊழியர்கள் விலங்குகளால் தாக்கப்பட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
22 mins ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
3 hours ago
ஓடிடி களம்
3 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
கருத்துப் பேழை
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
சினிமா
4 hours ago
தமிழகம்
4 hours ago