மேற்குவங்க மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக சிலிகுரி – காங்டாக் இடையிலான சாலை துண்டிக்கப்பட்டதால் அப்பகுதியில் வாகனப் போக்குவரத்து முடங்கி உள்ளது. மேற்குவங்கத்தின் டார்ஜிலிங் மற்றும் சிக்கிம் மாநிலத்தின் மலைப்பகுதிகளில் உள்ள சாலைகளை பராமரித்து வரும் எல்லை சாலை நிறுவனத்தின் (பிஆர்ஓ) உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக, சிலிகுரி-காங்டாக் இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் (என்எச் 10) ஸ்வாதி ஜோரா பகுதியில் கடந்த வியாழக்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது. இது சரிசெய்யப்பட்டு நேற்று முன்தினம் ஒருபக்கம் சிறிய ரக (கார்) வாகனப் போக்குவரத்து தொடங்கியது.
இந்நிலையில் அதே பகுதியில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டு சாலை முழுவதும் துண்டிக்கப்பட்டது. இதனால் பயணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நிற்கின்றன. எனினும் சிலிகுரி-டார்ஜிலிங் சாலையில் போக்குவரத்து தடைபடவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 mins ago
ஆன்மிகம்
20 mins ago
தமிழகம்
40 mins ago
தமிழகம்
5 hours ago
இந்தியா
1 hour ago
கருத்துப் பேழை
1 hour ago
தமிழகம்
1 hour ago
வணிகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
வாழ்வியல்
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
7 hours ago