தெலுங்கானா, ஆந்திர மாநிலங்களில் கொளுத்தும் வெயிலுக்கு இதுவரை 153 பேர் பலி

By பிடிஐ

தெலுங்கானா, மற்றும் ஆந்திர மாநிலங்களின் பலபகுதிகளில் சுட்டெரிக்கும் கோடை வெயிலினால் ஏற்படும் வெப்ப அலைக்கு இதுவரை 153 பேர் பலியாகியுள்ளனர்.

தெலுங்கானாவில் 73 பேர்களும், ஆந்திராவில் 80 பேர்களும் வெயிலுக்கு பலியானதாக அம்மாநிலங்களின் அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரகாசம் மாவட்டத்தில் 40 பேர்களும், விசாகப்பட்டிணத்தில் 12 பேர்களும் ஸ்ரீகாகுளத்தில் 8 பேர்களும் பலியாக, தெலுங்கானா மாநிலத்தின் நல்கொண்டா பகுதியில் 28 பேர்களும், கரீம் நகரில் 22 பேர்களும் கம்மம் மாவட்டத்தில் 9 பேர்களும் பலியாகியுள்ளதாக அரசு தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆந்திராவில் மே 18 முதல் இன்று வரையிலும், தெலுங்கானாவில் ஏப்ரல் 15 முதல் இன்று வரையிலும் இவ்வளவு பேர் வெயிலுக்கு பலியாகியுள்ளனர்.

கம்மம், நல்கொண்டா, நிஜாமாபாத், ராமகுண்டம் ஆகிய ஊர்களில் அதிகபட்ச வெப்ப நிலை 47 டிகிரி செல்சியஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹைதராபாத்தில் இன்று 44 டிகிரி செல்சியஸ் வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது.

வெப்ப நிலை தொடர்ந்து 42 டிகிரிக்கும் மேல் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

மேலும்