சர்வதேச நிழல்உலக தாதா தாவூத் இப்ராஹீம் குறித்து திங்கள்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் அறிக்கை வெளியிடுவேன் என்று தெரிவித்துள்ளார் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்.
தாவூத் எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை என அவரது இணை அமைச்சர் தெரிவித்ததால் சர்ச்சை எழுந்துள்ள நிலையில் ராஜ்நாத் சிங் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
லக்னோவில் கட்சித்தொண்டர்களுடன் பேசியபிறகு இது தொடர்பாக நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தற்போது நடந்துவரும் கூட்டத்தொடரில் தாவூத் விவகாரம் பற்றி நான் அறிக்கை வெளியிடுவேன் என்று தெரிவித்தார்ராஜ்நாத் சிங்.
மக்களவையில் மே 5ம் தேதி எழுத்து மூலம் உள்துறை இணை அமைச்சர் ஹரிபாய் பரதிபாய் சவுத்ரி பதில் அளித்தார். தாவூர் இருக்குமிடம் அரசுக்கு தெரியாது. அவர் இருக்கும் தெரியவந்ததும் அவரை இந்தியாவுக்குஅழைத்துவருவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும். தாவூத் எங்கிருக்கிறார் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை அந்த பதலில் சவுத்ரி தெரிவித்திருந்தார். இது எதிர்க்கட்சிகள் மத்தியில் பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த பிரச்சினையில் இந்திய அரசின் நிலைப்பாடு மாறியதால் நாட்டுக்கு தர்மசங்டத்தை ஏற்படுத்திவிட்டதாக எதிர்க்கட்சிகள் குறை கூறியுள்ளன.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
8 mins ago
ஆன்மிகம்
16 mins ago
ஆன்மிகம்
34 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
6 hours ago