10 ஆண்டுக்கு ஹைதராபாத் உயர் நீதிமன்றம் இரு மாநிலங்களுக்கும் பொதுவானது: பொது நல வழக்கில் தீர்ப்பு

By செய்திப்பிரிவு

ஹைதராபாத் உயர் நீதிமன்றம் அடுத்த 10 ஆண்டுகள் வரை ஆந்திர, தெலங்கானா மாநிலங்களுக்கு பொதுவானதாக செயல்படும் என ஹைதராபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித் துள்ளது.

ஹைதராபாத்தில் உயர் நீதிமன்றம் உள்ளது. தெலங்கானா பிரிவினைக்குப் பிறகு இந்த உயர் நீதிமன்றத்தில் இருமாநிலங்களின் வழக்குகள் தனித்தனியாக நடந்துவருகின்றன.

தற்போது, ஹைதராபாத் உயர் நீதிமன்றம் தெலங்கானா வுக்கு சொந்தம் என்று அங்குள்ள வழக்கறிஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆந்திர உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், ஆந்திர மாநிலத்தில் தனியாக உயர் நீதிமன்றம் அமைக்கும் வரை, ஹைதராபாத்தில் உள்ள இந்த உயர் நீதிமன்றம் இரு மாநிலங்களுக்கும் பொதுவானதாக செயல்படும்.

ஆந்திர மாநில அரசு உயர் நீதிமன்றத்துக்காக இடம் தேர்வு செய்த பின்னர், அங்கு உயர் நீதிமன்றம் அமைக்க மாநில பிரிவினை சட்டப்படி, மத்திய அரசு நிதி வழங்க வேண்டும்.

அதுவரை விசாகப்பட்டினம், திருப்பதி ஆகிய இரண்டு இடங்களில் உயர் நீதிமன்றத்துக்கு என தனி அமர்வு அமைத்துக் கொள்ளலாம். பூகோள ரீதியாக தற்போதைய உயர் நீதிமன்றம், தெலங்கானா மாநிலமான ஹைதராபாத்தில் உள்ளது.

ஆந்திர அரசு தனி உயர் நீதிமன்றம் அமைத்த பிறகு இந்த உயர் நீதிமன்றம் தெலங் கானாவுக்குச் சொந்தமாகும். எனவே, 10 ஆண்டுகள் வரை இருமாநில அரசுக்கும் ஹைதராபாத் உயர் நீதிமன்றம் பொதுவானதாக செயல்படும் என தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

19 mins ago

கருத்துப் பேழை

12 mins ago

தமிழகம்

50 mins ago

சினிமா

55 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

வலைஞர் பக்கம்

2 hours ago

கல்வி

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

மேலும்