டெல்லி அரசின் அதிகார வரம்பு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு நேற்று விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து மூன்று வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி டெல்லி அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
டெல்லி ஊழல் தடுப்புப் பிரிவினர் (ஏசிபி), லஞ்ச விவகாரம் தொடர்பாக சோனியா விஹார் காவல் நிலைய தலைமைக் காவலர் அனில் குமாரை அண்மையில் கைது செய்தனர்.
இதை எதிர்த்து அவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தன்னை கைது செய்யும் அதிகாரம் ஏசிபிக்கு இல்லை என்றும் உடனடியாக ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் அவர் மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு கடந்த 25-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த நீதிபதி விபின் சங்வி, தலைமைக் காவலர் அனில்குமாரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
‘டெல்லியில் பணியாற்றும் மத்திய, மாநில அரசு ஊழியர்களைக் கைது செய்யும் அதிகாரம் டெல்லி ஊழல் தடுப்பு பிரிவுக்கு உள்ளது. முதல்வரின் ஆலோசனைபேரிலேயே மூத்த அதிகாரிகள் நியமனம் செய்யப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய அரசு வெளியிட்ட அரசாணை சந்தேகத்துக்குரியதாக உள்ளது’ என்று நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கடந்த 27-ம் தேதி மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது.
‘உயர் நீதிமன்ற தீர்ப்பால் டெல்லி நிர்வாகத்தில் குளறுபடிகள், பாதிப்புகள் நேரிடும், எனவே உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று மத்திய அரசு தனது மனுவில் கோரியுள்ளது.
இம்மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, லலித் ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த நீதிபதிகள், மத்திய அரசின் மேல்முறையீட்டு மனு குறித்து மூன்று வாரங்களுக்குள் டெல்லி அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். மத்திய அரசு வெளியிட்ட அரசாணை சந்தேகத்துக்குரியதாக உள்ளது என்று உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்த கருத்தை பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இணைப்பிதழ்கள்
5 hours ago
இந்தியா
3 mins ago
இந்தியா
39 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
வணிகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago