கேஜ்ரிவாலுக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை

By செய்திப்பிரிவு

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக தொடரப் பட்டுள்ள அவதூறு வழக்கு மீதான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் நேற்று தடைவிதித்தது.

இந்த விவகாரத்தில் கேஜ்ரிவால் தாக்கல் செய்துள்ள மனு மீது தனது பதிலை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது.

இந்த நோட்டீஸுக்கு 6 வாரத் துக்குள் பதில் தெரிவிக்க வேண் டும் என்று நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பிரபுல்லா சி பந்த் ஆகி யோர் அடங்கிய அமர்வு குறிப் பிட்டுள்ளது.

டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலுக்கு எதிராக விசாரணை நீதிமன்றத்தில் நடந்துவரும் இரு கிரிமினல் அவதூறு வழக்குகள் தொடர்பான விசாரணைக்கு தடைவிதிக்கப்படுகிறது என்றும் நீதிபதிகள் உத்தரவில் கூறி உள்ளனர்.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தின் முன்னாள் அரசியல் செயலர் பவன் கேரா ஆகியோர் இந்த அவதூறு புகார்களை பதிவு செய்திருந்தனர். இந்த வழக்குகள் சம்பந்தமான விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

நிதின் கட்கரி தாக்கல் செய்த புகாரின் அடிப்படையில் கேஜ்ரிவால் மீது குற்றம்சாட்டப்பட்டு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்பேரில் அவர் வழக்கை எதிர்கொண்டு வருகிறார்.

இந்தியாவில் மோசமாக ஊழல் புரிந்தவர்கள் என ஆம் ஆத்மி வெளியிட்ட பட்டியலில் எனது பெயரையும் சேர்த்து என்னை களங்கப்படுத்திவிட்டனர் என்று கட்கரி குற்றம்சாட்டி இருந்தார். இந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. கட்கரியும் இந்த வழக்கில் தனது வாக்கு மூலத்தை பதிவுசெய்துள்ளார்.

கர்கர்தூமா விசாரணை நீதிமன்றத்தில் கேஜ்ரிவாலுக்கு எதிராக பவன்கேரா தொடர்ந்துள்ள அவதூறு வழக்கு விசாரணைக்கும் உச்ச நீதிமன்றம் தடைவிதித்திருக்கிறது.

நேற்று நடந்த விசாரணையில் கேஜ்ரிவால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜீவ் தவான் விசாரணைக்கு தடை விதிக்கவேண்டும் என விடுத்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

6 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

சினிமா

15 mins ago

இந்தியா

22 mins ago

இந்தியா

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

வணிகம்

2 hours ago

மேலும்