நாடு முழுவதிலும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை தேர்தெடுக்க புதிய விதிமுறைகளை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.
இது குறித்து மனிதவள மேம் பாட்டு அமைச்சகத்தின் துணைச் செயலாளர் சூரஜ் சிங் அனுப்பி யுள்ள சுற்றறிக்கையில், “புதிய முறைப்படி மத்திய பல்கலைக் கழகத்தின் அடுத்த துணைவேந்த ராக அரசுக்கு பரிந்துரைக்கப்படும் நபர், துணைவேந்தரை தேர்வு செய்யும் குழுவில் ஒருவராக இருத்தல் கூடாது. அப்படி இருந் தால் இனி அவர் தேர்வுக்குரிய தகுதியை இழந்து விடுவார்” என்று கூறப்பட்டுள்ளது.
சமீப காலமாக மத்திய பல்கலைக்கழகங்கள் சிலவற்றில், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டோர் கொண்ட தேர்வுக் குழுவில் இடம் பெற்றவர்களில் ஒருவரின் பெயர், அடுத்த துணைவேந்தராக பரிந்துரைக்கப் பட்டு வந்துள்ளது.
தேர்வுக்குழுவில் ஒருவராக இருக்கும் துணைவேந்தர் தான் அந்தப் பதவியை மீண்டும் பெறும் வகையில் பரிந்துரையில் தனது பெயரை சேர்த்து விடுவதும் வழக்க மாக இருந்து வந்துள்ளது. இது போன்ற முறை சில மத்திய பல் கலைக்கழகங்களில் தொடர்ந்து கடைபிடிக்கப்படுவது ஊழலுக்கு வழி வகுக்கும் என மனித வள மேம்பாட்டு அமைச்சகம் கருது கிறது. மத்திய பல்கலைக்கழகங் களின் துணைவேந்தருக்கு இருக் கும் மிக அதிகமான செல்வாக்கு இதற்கு காரணம் என்றும் கூறப் படுகிறது. இதையடுத்து இத்துறை யின் அமைச்சர் ஸ்மிருதி இரானி தனது அதிகாரிகளுடன் ஆலோ சனை நடத்தி, இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாகக் கூறப்படு கிறது. திருவாரூரில் மத்தியப் பல்க லைக்கழகம், சென்னையில் கடல் சார் பல்கலைக்கழகம் என தமிழ கத்தில் 2 பல்கலைக்கழகங்கள் உட்பட நாடு முழுவதிலும் 45 மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவற்றின் செலவுக்கு அதிக நிதி அளிக்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 mins ago
ஆன்மிகம்
15 mins ago
இந்தியா
19 mins ago
உலகம்
6 mins ago
கருத்துப் பேழை
4 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
இந்தியா
42 mins ago
உலகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
கல்வி
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
5 hours ago