நாடாளுமன்றத்தில் ஓரணியாக செயல்பட ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம் முடிவு

By செய்திப்பிரிவு

நிலம் கையகப்படுத்துதல் மசோதா உள்ளிட்ட பிரச்சினைகளில் நாடாளுமன்றத்தில் ஓரணியாகச் செயல்பட ஆம் ஆத்மியும் ஐக்கிய ஜனதா தளமும் முடிவு செய்துள் ளன.

பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை டெல்லியில் நேற்றுமுன்தினம் சந்தித்துப் பேசினார். அப்போது ஐக்கிய ஜனதா தளமும் ஆம் ஆத்மியும் இணைந்து செயல்படுவது குறித்து இருதலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

இதுகுறித்து ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் கே.சி. தியாகி கூறியதாவது: டெல்லிக்கு மாநில அந்தஸ்து அளிக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி அரசு கோரி வருகிறது. அதற்கு நாங்கள் முழு ஆதரவு அளிப்போம்.

பாஜகவுக்கு எதிராக இருகட்சி களும் இணைந்து செயல்படும். நிலம் கையகப்படுத்துதல் மசோதா உள்ளிட்ட பல்வேறு விவகாரங் களில் நாடாளுமன்றத்தில் இரு கட்சிகளும் ஓரணியாகச் செயல் படும். இவ்வாறு அவர் தெரிவித் தார். மக்களவையில் ஆம் ஆத்மிக்கு 4 உறுப்பினர்கள் உள்ளது நினைவுகூரத்தக்கது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் நிதிஷ்குமார் சந்தித்துப் பேசினார். அப்போது பிஹார் அரசியல் குழப்பத்தின் போது ஐக்கிய ஜனதா தளத்துக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்ததற்கு நிதிஷ் நன்றி கூறினார்.

பின்னர் திஹார் சிறையில் உள்ள தேசிய லோக் தளம் கட்சித் தலைவர் ஓம் பிரகாஷ் சவுதாலாவையும் நிதிஷ்குமார் சந்தித்துப் பேசினார்.

தேசிய அளவில் ஜனதா கட்சிகளை ஒன்றிணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த கூட்டணியில் லோக் தளமும் உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

இந்தியா

42 mins ago

விளையாட்டு

51 mins ago

இந்தியா

1 hour ago

கல்வி

1 hour ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

மேலும்