பிரதமர் மோடியின் பெல்ஜியம் பயணம் ரத்து

By பிடிஐ

வரும் ஏப்ரல் மாதம் எட்டு நாள் பயணமாக பிரதமர் மோடி வெளி நாடுகளுக்குச் செல்லவுள்ளார். முதலில் ஜெர்மனிக்குச் சென்று அங்கு தொழிற்துறை கண்காட்சி யைத் தொடங்கி வைக்கிறார். பின்னர் பெல்ஜியம் நாட்டின் பிரசெல்ஸ் நகரத்தில் இந்தியா-ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யக் கோரி அதற்கான தேதியையும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியிருந்தது.

ஆனால் ஐரோப்பிய யூனியன் பதில் அளிக்கவில்லை. இந்தியா வில் மீனவர்களைக் கொன்ற 2 இத்தாலிய கப்பல் பணியாளர்கள் மீது வழக்கு தொடர்ந்திருப்பதுதான் காரணம் என்று கூறப்பட்டது.

தாமதத்துக்கு வருத்தம் தெரி வித்துக் கொள்வதாக ஐரோப்பிய நாடாளுமன்றக் குழுவின் தலைவர் ஜியோப்ரி வான் ஆர்டென் கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்தியாவுடனான உச்சி மாநாட்டுக்கு விரைவில் புதிய தேதியை அறிவிக்க அனைத்து ஐரோப்பிய நாடுகளையும் சம்மதிக்க முயற்சிப்போம் என்று ஐரோப்பிய நாடாளுமன்றக் குழு நேற்று கூறியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

23 mins ago

க்ரைம்

37 mins ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

45 mins ago

க்ரைம்

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்