மீனவர்கள் நலன் காக்க தேசிய ஆணையம் தேவை: கனிமொழி

By பிடிஐ

மீனவர்கள் நலன் காக்க தேசிய ஆணையம் அமைக்க வேண்டும் என ராஜ்யசபாவில் திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

மாநிலங்களவையில் பேசிய திமுக எம்.பி. கனிமொழி, "70% மேலான மீனவர்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளனர். அவர்கள் நலனைப் பேணும் வகையில் தேசிய ஆணையம் அமைக்க வேண்டும். அவ்வாறு அமைக்கப்பட்டால் 1.5 கோடி மீனவர்கள் தங்கள் உரிமைகளுக்கு குரல் கொடுக்க ஒரு தளம் உருவாகும்.

இந்தியப் பொருளாதாரத்தில் மீனவர்கள் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. ஆனால், அவர்கள் பொருளாதார நிலையோ வேதனைக்குரியதாகவே இருக்கிறது.

கடந்த 2013-14 காலகட்டத்தில் மீனவர்கள் நலனுக்காக மத்திய அரசு எவ்வித பங்களிப்பும் அளிக்கவில்லை.

எனவே இத்தகைய சூழலில் மீனவர்கள் நலனுக்காக தேசிய அளவிலான ஆணையம் ஒன்றை அமைப்பது மிகவும் அவசியமாகிறது" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

ஆன்மிகம்

4 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

மேலும்