கோவா சட்டப்பேரவையில் கடும் அமளி

By பிடிஐ

கிறிஸ்தவர்கள் பன்றிக் கறி சாப்பிடு கிறவர்கள் என்று கூறி அரசு அதிகாரி கள் அவமரியாதை செய்வதாக கோவா சட்டப்பேரவையில் நேற்று பிரச்சினை எழுப்பப்பட்டது.

கோவா மாநிலத்தில் தற்போது பாஜக ஆட்சியில் உள்ளது. அந்த மாநில சட்டப்பேரவையில் கோவா விகாஸ் கட்சியைச் சேர்ந்த சியாட்டன் சில்வா நேற்று பேசிய தாவது:

கோவாவின் தெற்கு மாவட்டத் தைச் சேர்ந்த சில அரசு அதிகாரி கள் கிறிஸ்தவர்களை அவமரி யாதை செய்யும் வகையில் பேசி வருகின்றனர். அண்மையில் அங் குள்ள அரசு மருத்துவமனைக்கு சென்ற கிறிஸ்தவர்களை மூத்த அதிகாரிகள் தரக்குறைவாக நடத்தி யுள்ளனர். மாநிலத்தின் பெரும் பாலான பகுதிகளில் அதிகாரி களின் மனநிலை கிறிஸ்தவர் களுக்கு எதிராக உள்ளது.

இவ்வாறு அவர் குற்றம் சாட்டினார். இந்த விவகாரத்தால் சட்டப்பேரவையில் சிறிது நேரம் அமளி ஏற்பட்டது.

கோவா மாநில மக்கள் தொகை யில் கிறிஸ்தவர்கள் 27 சதவீதம் பேர் உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

11 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்