மாநிலங்களவை எம்.பி. பதவிக்கான போட்டியில் பிரகாஷ் காரத், பிருந்தா காரத், மம்மூட்டி

By ஐஏஎன்எஸ்

மாநிலங்களவையில் கேரளத்தில் இருந்து காலியாகும் ஓரிடத்துக் கான போட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், அவரது மனைவி பிருந்தா காரத், நடிகர் மம்மூட்டி ஆகியோர் முன்னணியில் உள்ளனர்.

மாநிலங்களவையில் கேரளத் தில் இருந்து 3 இடங்கள் காலி யாக உள்ளன. இதில், கேரள சட்டப்பேரவையில் கட்சிகளின் பலத்தின் அடிப்படையில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி 2 இடத்தையும் எதிர் அணியான இடதுசாரிகள் ஓரிடத்தையும் பெறமுடியும்.

இந்நிலையில் இடதுசாரிகள் வெல்லும் வாய்ப்புள்ள ஓரிடத்தை பெறுவதற்கான போட்டியில், பிரகாஷ் காரத், பிருந்தா காரத் ஆகியோருடன், மார்க்சிஸ்ட் கட்சி யில் நீண்ட காலமாக இருந்துவரும் கேரள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியும் முன்னணியில் உள்ளனர்.

இவர்கள் தவிர, மார்க்சிஸ்ட் பத்திரிகையான ‘தேசாபிமானி’யின் செய்தி ஆலோசகர் என்.மாதவன் குட்டி, மார்க்சிஸ்ட் பின்புலம் கொண்ட கைரளி டி.வி.யின் முதன்மை ஆசிரியர் ஜான் பிரிட்டாஸ் ஆகிய இரு பத்திரிகை யாளர்களும் இப்பதவிக்கான போட்டியில் உள்ளனர்.

மாதவன் குட்டி கடந்த 4 ஆண்டுகளாக கேரள டி.வி. சேனல் களில் பிரபலமாக உள்ளார். மார்க் சிஸ்ட் கட்சியின் அரசியல் விவகாரக் குழு உறுப்பினர் பினரயி விஜயன் தலைமையிலான அணிக்கு ஆதரவாக பேசிவருகிறார்.

இந்நிலையில் மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் ஒருவர் கூறும்போது, “இப்பதவிக்கு பல்வேறு பெயர்கள் பரிசீலிக் கப்பட்டு வருகின்றன. வேட்பாளர் களின் பலம், பலவீனங்களை எங்கள் கட்சி எப்போதும் ஆராயும். இதனாலேயே இறுதி அறிவிப்பு வரும்போது, அது ஆச்சரியப்படும் வகையில் இருந்து வருகிறது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

உலகம்

18 mins ago

வணிகம்

35 mins ago

சினிமா

57 mins ago

இந்தியா

29 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

4 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

6 hours ago

மேலும்