ஜம்முவில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்: ஒருவர் காயம்

By செய்திப்பிரிவு

ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் ராணுவ முகாம் அருகே தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் புனித யாத்திரை மேற்கொண்டிருந்த நபர் ஒருவர் படுகாயமடைந்தார்.

இது குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் கூறும்போது, "சம்பா பகுதியில் ஜம்மு-பதான்கோட் நெடுஞ்சாலை அருகே உள்ள ராணுவ முகாம் மீது இன்று அதிகாலை தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். காலை 5.50 மணியளவில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. இதில், பொதுமக்களில் ஒருவர் காயமடைந்தார். அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அவர் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர். மாதா வைஷ்ணோதேவி கோவிலுக்கு புனித யாத்திரை வந்த பக்தர் என்பது தெரியவந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 2-வது முறையாக நடத்தப்படும் தாக்குதல் இது. நேற்று, காஷ்மீர் மாநில போலீஸ் நிலையம் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதற்கு பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்தனர்

கடந்த மார்ச் 1-ம் தேதி பாரதிய ஜனதா மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி கூட்டணி ஆட்சி அமைந்த பின் பெரிய அளவில் நடக்கும் அடுத்தடுத்து இரண்டு தாக்குதல் நடந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

சுற்றுலா

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்