டெல்லியின் வளர்ச்சிக்கு மத்திய அரசு துணை நிற்கும்: பிரதமர் மோடி வாழ்த்து

By செய்திப்பிரிவு

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்ட நிலையில் அந்தக் கட்சியின் தலைவர் அர்விந்த் கேஜ்ரி வாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

அர்விந்த் கேஜ்ரிவாலை நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்த பிரதமர், டெல்லியின் வளர்ச்சிக்கு மத்திய அரசு துணை நிற்கும் என உறுதி அளித்தார். இதுகுறித்து மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, "நான் அர்விந்த் கேஜ்ரிவாலை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தேன். டெல்லி யின் வளர்ச்சிக்கு மத்திய அரசு முழு ஆதரவு அளிக்கும் என அவரிடம் உறுதி அளித்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கேஜ்ரிவால் நன்றி

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த கேஜ்ரிவால், “டெல்லியின் பிரச்சி னைகள் குறித்து ஆலோசிக்க விரைவில் உங்களை வந்து சந்திக்கிறேன். மத்திய அரசின் உறு துணை எங்களுக்கு அவசிய மானது" என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

16 mins ago

தமிழகம்

20 mins ago

சினிமா

37 mins ago

தொழில்நுட்பம்

42 mins ago

இந்தியா

24 mins ago

இந்தியா

31 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்