டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்ட நிலையில் அந்தக் கட்சியின் தலைவர் அர்விந்த் கேஜ்ரி வாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
அர்விந்த் கேஜ்ரிவாலை நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்த பிரதமர், டெல்லியின் வளர்ச்சிக்கு மத்திய அரசு துணை நிற்கும் என உறுதி அளித்தார். இதுகுறித்து மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, "நான் அர்விந்த் கேஜ்ரிவாலை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தேன். டெல்லி யின் வளர்ச்சிக்கு மத்திய அரசு முழு ஆதரவு அளிக்கும் என அவரிடம் உறுதி அளித்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
கேஜ்ரிவால் நன்றி
பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த கேஜ்ரிவால், “டெல்லியின் பிரச்சி னைகள் குறித்து ஆலோசிக்க விரைவில் உங்களை வந்து சந்திக்கிறேன். மத்திய அரசின் உறு துணை எங்களுக்கு அவசிய மானது" என்று கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
கல்வி
16 mins ago
தமிழகம்
20 mins ago
சினிமா
37 mins ago
தொழில்நுட்பம்
42 mins ago
இந்தியா
24 mins ago
இந்தியா
31 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago