பன்றிக் காய்ச்சலுக்கு இதுவரை 926 பேர் பலி

By பிடிஐ

நாட்டில் பரவி வரும் பன்றிக் காய்ச்சலுக்கு இதுவரை 926 பேர் பலியாகியுள்ளனர்.

மத்திய அரசின் கணக்குப்படி, இந்த ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி வரை பன்றிக் காய்ச்சலால் 16,235 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலியானவர்களின் எண்ணிக்கை 926 ஆக உயர்ந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில்தான் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியானவர் களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இங்கு இதுவரை 234 பேர் பலியாகியுள்ளனர். 4,884 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு அடுத்து குஜராத்தில் 231 பேர் பலியாகியுள்ள நிலையில், அங்கு 3,527 பேர் பாதிக்கப்பட்டுள் ளனர். மத்தியப் பிரதேசத்தில் 127 பேர் பலியாகி இருக்க, 716 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிராவில் 112 பேர் பலியான நிலையில், 1,221 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தெலங் கானா, கர்நாடகா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் பலியானவர்களின் எண்ணிக்கை முறையே 54, 39 மற்றும் 38 ஆக உள்ளது.

டெல்லியில் இதுவரை 8 பேர் பலியாகி உள்ளனர் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

15 mins ago

சினிமா

44 mins ago

க்ரைம்

25 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

38 mins ago

தொழில்நுட்பம்

20 mins ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்