ஆந்திரா, தெலங்கானா கடன் தொகை: மத்திய அரசு தகவல்

By செய்திப்பிரிவு

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் பெற்றிருந்த கடன்களை மத்திய நிதி அமைச்சகம் தெலங்கானா, ஆந்திரா ஆகிய இரு மாநிலங்களுக்கும் பங்கீடு செய்துள்ளது. தெலங்கானாவுக்கு ரூ.61.71 ஆயிரம் கோடியும், ஆந்திர மாநிலத்துக்கு ரூ.86.34 ஆயிரம் கோடியும் கடன் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் பிரிவினைக்கு முன்பு, சிறுசேமிப்பு திட்டம், நபார்டு உள்ளிட்டவைகள் மூலம் ஆந்திர மாநிலம் ரூ.1 லட்சத்து 48 ஆயிரம் கோடி கடன் வாங்கி இருந்தது. இந்நிலையில், இந்த மாநிலம் இரண்டாக பிரிந்ததால், மாநில பிரிவினை சட்டத்தின்படி மத்திய நிதித் துறை அமைச்சகம் கடனை இரண்டாக பிரித்துள்ளது. இதில் பிரச்சினைக்குறிய கடன்களை தவிர்த்து கணக்கிடுகையில், மக்கள் தொகையின் அடிப்படையில் ஆந்திர மாநிலத்துக்கு ரூ. 86.34 ஆயிரம் கோடியும், தெலங்கானாவுக்கு ரூ.61.71 ஆயிரம் கோடியும் கடன் இருப்பதாக இரு மாநிலங்களுக்கும் தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

14 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்